நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,868-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,281 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 645 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் விகிதம் அதிகரித்துள்ளது.