பஞ்சாப் தேர்தலில் போட்டியிடவுள்ள ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பெயரை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன.
இந்த தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாரதிய ஜனதா கூட்டணி என பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது.
அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றிக்கான பிரசாரத்தை செய்து வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியானது தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தனது கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து அதிரடி காட்டி வருகின்றது.
இந்நிலையில், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளரை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளோம் என அரவிந்த கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.