போகி பண்டிகையையொட்டி மக்கள் அனைவருக்கும் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் அறுவடை திருநாளை பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் லோஹ்ரி என்றும், அசாமில் போகாலி பிஹு என்றும், உத்தரப் பிரதேசத்தில், குஜராத், மகாராஷ்டிரத்தில் மகர சங்கராந்தி என்றும் கொண்டாடப்படுகிறது.
மேலும், அவர் சுட்டுரைப் பக்கத்தில் கூறிய வாழ்த்துச் செய்தியில்,
இந்த புனித நெருப்பானது மக்களின் வாழ்வில் ஏற்படும் அனைத்து தடைகளையும் நீக்கும் என்று நம்புகிறேன். எதிர்மறைகளை அகற்றி, நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை நம் வாழ்வில் கொண்டு வரட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.