தடுப்பூசியைத் தவிர வேறு எதுவும் பாதுகாப்பில்லை: மோடி எச்சரிக்கை

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுப்பூசியைத் தவிர வேறு எதனாலும் பாதுகாப்பை வழங்க முடியாது என்று அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியைத் தவிர வேறு எதுவும் பாதுகாப்பில்லை: மோடி எச்சரிக்கை


கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுப்பூசியைத் தவிர வேறு எதனாலும் பாதுகாப்பை வழங்க முடியாது என்று அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து பண்டிகை கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபடவுள்ளனர்.

மறுபுறம் கரோனா பரவலும் அதிகரித்துள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தடுப்பூசியைத் தவிர வேறு எதுவும் கரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்காது.

முந்தைய தொற்றை ஒப்பிடுகையில் ஒமைக்ரன வேகமாக பரவுகிறது. பதற்றமடைய வேண்டாம். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com