பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
பஞ்சாப் மாநிலத்தின் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சமீப காலமாக போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று(ஜன.12) ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ரூ.50 கோடி மதிப்பிலான 7.4 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
மேலும், துப்பாக்கி மற்றும் குண்டுகள் ஆகியவற்றையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.
முன்னதாக கடந்த டிச.26 ஆம் தேதி ஃபெரோஸ்பூர் எல்லைப் பகுதியில் ரூ.200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | அதிகரிக்கும் கரோனா: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை