ஒடிசாவில் 10 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் பாதிப்பு

ஒடிசா மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
ஒடிசாவில் 10 ஆயிரத்தைத் தாண்டியது ஒருநாள் பாதிப்பு

ஒடிசா மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

மாநிலத்தில் இன்றைய பாதிப்பு 10,489 ஆகப் பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 11,44,401 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 3 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 8,484 பேர் தொற்றுக்கு இறந்துள்ளனர். 

ஒரேநாளில் 70,117 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 14.96 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், குறைந்தது 982 குழந்தைகள் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் 2,500-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், 1000 பேர் பாதிப்பு உள்ள மாவட்டங்கள் மஞ்சள் மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com