பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை மாற்றுத் தேதியில் நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளன. இதில், பஞ்சாப் மாநிலத்திற்கான வாக்குப் பதிவு பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், பிப்ரவரி 16ஆம் தேதி குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப் மக்கள் வாராணசிக்கு புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம் என்பதால் வேறு தேதியில் வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, பாஜக, பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது.
இதையடுத்து, கட்சிகளின் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.