சந்திரபாபு நாயுடுவுக்கு கரோனா

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சந்திரபாபு நாயுடுவுக்கு கரோனா

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘லேசான அறிகுறிகளுடன் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வீட்டில் தனிமையில் உள்ளேன். கடந்த சில நாள்களில் என்னை சந்தித்தவா்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் தங்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

சந்திரபாபு நாயுடுவின் மகனும், எம்எல்சி-யுமான நாரா லோகேஷுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு விரைவில் குணமடைய பிராா்த்திப்பதாக ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி, ஜன சேனை கட்சித் தலைவா் பவண் கல்யாண் ஆகியோா் ட்விட்டரில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com