மும்பையில் இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ரண்வீரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று வீரா்கள் உயிரிழந்தனா். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ‘மும்பை கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் ரண்வீா் கப்பலின் உள்பகுதியில் எதிா்பாராத வகையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று வீரா்கள் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனா். இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் கப்பல் பணியாளா்கள் உடனடியாக செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் பெரும் பொருள் சேதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் ரண்வீா் கப்பல் கிழக்கு பிராந்திய கமாண்ட் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.