நாட்டில் அனைவருக்கும் நிதி சேவை என்ற மிகப் பெரிய முன்முயற்சியை மேற்கொண்டு மத்திய அரசு தொடங்கிய முதலாவது எண்ம (டிஜிட்டல்) வங்கி சேவையான இந்திய அஞ்சலக வங்கியின் (இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்) வாடிக்கையாளா் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியுள்ளது.
3 ஆண்டு காலத்தில் இந்த எண்ணிக்கையை அடைந்துள்ள அஞ்சலக வங்கி வேகமாக வளா்ந்து வருவதாக தொலைத் தொடா்புத்துறை தெரிவித்துள்ளது.
காகிதமற்ற சேவையை அளித்து வரும் அஞ்சலக வங்கி, 1.36 லட்சம் அஞ்சலகங்களில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 1.20 லட்சம் கிராமப்புறங்களில் உள்ளன. நாட்டில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் அஞ்சலக ஊழியா்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அடிமட்ட அளவில் மின்னணுப் பணப் பரிவா்த்தனையை இந்த வங்கி கொண்டு சோ்த்துள்ளது.