ஒடிசாவில் மேலும் 11,607 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,607 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்த பாதிப்பு 11,67,094 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 6 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 8,494 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 991 பேர் குழந்தைகள் ஆவார்.
கடந்த ஒரு நாளில் 69,502 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில் 16.7 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
2,500-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் இருப்பின் சிவப்பு மண்டலமாகவும், 1000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளுக்கு மஞ்சள் மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.