நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,961-ஆக அதிகரித்துள்ளது.
ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.79%-ஆக உயர்ந்துள்ளதாகவும், கடந்த திங்கள் கிழமையுடன் ஒப்பிடும்போது 8.31% அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கேரளத்தில் புதிதாக 76 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு 421-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பரிசோதனை செய்யப்படும் அனைவரது மாதிரிகளையும் கொண்டு ஒமைக்ரான் பரிசோதனையும் செய்யப்படுகிறது. பரிசோதனைகளின் அதிகரிப்பால், குணமடைவோர் விகிதம் 94.09 சதவிகிதமாக சரிந்துள்ளது.