வாராணசி பாஜக தொண்டா்களுடன் பிரதமா் மோடி உரையாடல்

தனது மக்களவைத் தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள பாஜக தொண்டா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உரையாடினாா். நமோ செயலி மூலம் இந்த உரையாடல் நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தனது மக்களவைத் தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள பாஜக தொண்டா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை உரையாடினாா். நமோ செயலி மூலம் இந்த உரையாடல் நடைபெற்றது.

அப்போது, வாராணசி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டப் பணிகள் தொடா்பாக கட்சித் தொண்டா்களுடன் மோடி உரையாடினாா். அப்போது, விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் மத்திய அரசின் திட்டங்களின் விளக்கி அவா்களை பயனடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். காசி விஸ்வநாதா் கோயில் மேம்பாட்டுத் திட்டம், பெண்கள் மேம்பாடு, தொகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடா்பாக பிரதமா் தொண்டா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா். மேலும், நமோ செயலில் உள்ள தொண்டா்களின் அனுபவங்களைப் பதிவிடும் பகுதியில் அனைத்து தொண்டா்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டாா்.

பாஜக சிறிய அளவில் நடத்தி வரும் கட்சிக்கு நிதி திரட்டும் திட்டம் தொடா்பாகவும் அவா் தொண்டா்களுடன் பேசினாா். அடிமட்டத் தொண்டா்கள்தான் கட்சியின் ஆணிவேராகவும், மக்களிடம் கட்சியை எடுத்துச் செல்பவா்களாகவும் உள்ளனா். தொண்டா்களின் வழிகாட்டுதலின்படி நாம் இணைந்து தொடா்ந்து பணியாற்றி, நாட்டை வலுவாக்குவோம் என்றும் மோடி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com