இதுவரை 161.16 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத் துறை

இந்தியாவில் இதுவரை 161.16 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் இதுவரை 161.16 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (சனிக்கிழமை காலை 7 மணி வரை) 67,49,746 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,61,16,60,078 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 

மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 488 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 21,13,365 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வயதுவாரி விவரங்கள்:

15 - 18 வயதுமுதல் தவணை -  4,06,33,023
18 - 44 வயது

முதல் தவணை -  53,26,20,729

இரண்டாம் தவணை -  38,40,43,892

45 - 59 வயது

முதல் தவணை -  19,88,04,364

இரண்டாம் தவணை -  16,52,80,537

60 வயதுக்கு மேல்

முதல் தவணை -  12,38,94,416

இரண்டாம் தவணை -  10,32,17,344

பூஸ்டர் தடுப்பூசி -24,04,338

சுகாதாரத்துறை

முதல் தவணை -   1,03,91,589

இரண்டாம் தவணை -  98,10,494

பூஸ்டர் தடுப்பூசி -25,79,571

முன்களப் பணியாளர்கள்

முதல் தவணை -  1,83,90,455

இரண்டாம் தவணை -  1,71,19,331

பூஸ்டர் தடுப்பூசி -24,69,995

மொத்தம்

1,61,16,60,078

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com