இந்தியாவில் இதுவரை 161.16 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (சனிக்கிழமை காலை 7 மணி வரை) 67,49,746 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 1,61,16,60,078 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மேலும், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,37,704 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 488 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 21,13,365 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வயதுவாரி விவரங்கள்:
15 - 18 வயது | முதல் தவணை - 4,06,33,023 |
18 - 44 வயது | முதல் தவணை - 53,26,20,729 இரண்டாம் தவணை - 38,40,43,892 |
45 - 59 வயது | முதல் தவணை - 19,88,04,364 இரண்டாம் தவணை - 16,52,80,537 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 12,38,94,416 இரண்டாம் தவணை - 10,32,17,344 பூஸ்டர் தடுப்பூசி -24,04,338 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,91,589 இரண்டாம் தவணை - 98,10,494 பூஸ்டர் தடுப்பூசி -25,79,571 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,90,455 இரண்டாம் தவணை - 1,71,19,331 பூஸ்டர் தடுப்பூசி -24,69,995 |
மொத்தம் | 1,61,16,60,078 |