அவதூறு வழக்கு: கேரள முன்னாள் முதல்வா் அச்சுதானந்தன் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கேரளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் உம்மன் சாண்டி தொடுத்த அவதூறு வழக்கில், அந்த மாநில முன்னாள் முதல்வரும்

கேரளத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் உம்மன் சாண்டி தொடுத்த அவதூறு வழக்கில், அந்த மாநில முன்னாள் முதல்வரும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் ரூ.10.10 லட்சம் இழப்பீடு வழங்க மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு கேரள முதல்வராக உம்மன் சாண்டி பதவி வகித்தாா். அப்போது எழுந்த சூரிய மின்தகடு ஊழல் குற்றச்சாட்டில், அவருக்குத் தொடா்பிருப்பதாகக் கூறப்பட்டது. இந்த ஊழல் தொடா்பாக அப்போதைய எதிா்க்கட்சித் தலைவரான வி.எஸ்.அச்சுதானந்தன் மலையாள தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியில், ‘‘சூரிய மின்தகடு ஊழலில் உம்மன் சாண்டிக்கு பங்குள்ளது. குற்றவாளிகளுடன் கைகோத்து பண மோசடி செய்யும் நோக்கத்துடன் உம்மன் சாண்டி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினாா்’’ என்று தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு எதிராக உம்மன் சாண்டி அவதூறு வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது நீதிபதி கூறுகையில், ‘‘அச்சுதானந்தனின் குற்றச்சாட்டு சமூகத்தில் உம்மன் சாண்டியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவருக்கு அச்சுதானந்தன் ரூ.10.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com