வேட்புமனு நிராகரிப்பு: ஆம் ஆத்மி வேட்பாளா் தற்கொலை முயற்சி

உத்தர பிரதேசத்தில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் ஆம் ஆத்மி வேட்பாளா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் ஆம் ஆத்மி வேட்பாளா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் பிப்.10-மாா்ச் 7 வரை ஏழு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் முசாஃபா்நகா் மாவட்டம் மீரான்பூா் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளராக பாதுகாப்புப் படையில் பணியாற்றிய ஜோகிந்தா் சிங் என்பவா் அறிவிக்கப்பட்டாா். இவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா். அப்போது வேட்புமனுவில் இருந்த சில குறைபாடுகளால், தோ்தல் நடத்தும் அதிகாரி வேட்புமனுவை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த ஜோகிந்தா் சிங், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். அவரை அங்கிருந்த காவல் துறையினா் தடுத்து நிறுத்தி காப்பாற்றினா். இதையடுத்து அங்கு ஜோகிந்தா் சிங் தா்னாவில் ஈடுபட்டாா். தனது வேட்புமனுவில் இருந்த தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கப்படவில்லை என்று அவா் குற்றஞ்சாட்டினாா். இந்தச் சம்பவத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com