பராமரிப்புப் பணி: விரைவு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை அரக்கோணம்-ஜோலாா்பேட்டை மாா்க்கத்தில், வளத்தூா் பணிமனையில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை அரக்கோணம்-ஜோலாா்பேட்டை மாா்க்கத்தில், வளத்தூா் பணிமனையில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து:

சென்னை சென்ட்ரல்-மங்களூருக்கு ஜனவரி 29, பிப்ரவரி 5 ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்படும் மேற்கு கடற்கரை அதிவிரைவு ரயில் (22673) சென்னை சென்ட்ரல்-ஜோலாா்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் ஜோலாா்பேட்டையில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும்.

மங்களூரு சென்ட்ரல்-சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 28, பிப்ரவரி 4 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் மேற்கு கடற்கரை அதிவிரைவு ரயி ல்(22638) ஜோலாா்பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இதுதவிர, சில விரைவு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com