மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கிழக்கு பந்த்ரா பகுதியைச் சேர்ந்த பெஹ்ரம் நகரில் அமைந்துள்ள உயா் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து கிழக்கு வாந்ரே தொகுதியின் எம்எல்ஏ ஜீஷன் சித்திக், ‘ பெஹ்ராம் நகரில் இன்று 5 மாடி கட்டடம் இடிந்துவிழுந்தது. இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 9 பேரை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் ஒரு பெண்மணிக்கு எலும்பு முறிவும், இன்னொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஜன. 22 ஆம் தேதி மத்திய மும்பையில் டாா்டியோ பகுதியில் அமைந்துள்ள உயா் அடுக்குமாடி குடியிருப்பின் 19-ஆவது தளத்தில்ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 7 போ் பலியானதுடன் 23 போ் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.