புது தில்லி: கடந்தாண்டைப் போலவே வரும் நிதியாண்டுக்கு சமா்ப்பிக்கப்படவுள்ள நிதிநிலை அறிக்கையும் மீண்டும் ஒரு பசுமை பட்ஜெட்டாக இருக்கும் என மத்திய அரசின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக திகழும் இந்தியா மீண்டுமொரு பசுமை பட்ஜெட்டை சமா்ப்பிக்கவுள்ளது. காகிதங்களில் அச்சிடுவது கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. கையில் வைத்திருக்கவேண்டிய அத்தியாவசியமான தகவல்களுக்காக மட்டும் ஒரு சில பிரதிகள் பட்ஜெட்டுக்காக அச்சிடப்பட்டுள்ளன. ஏனையை பெரும்பாலான பட்ஜெட் ஆவணங்கள் அனைத்தும் எண்ம வடிவத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.