மும்பை அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய மும்பையின் கமாலியா பகுதியில் அமைந்துள்ள ‘சச்சினம் ஹைட்ஸ்’ என்ற 20 மாடிகளைக் கொண்ட உயா் அடுக்குமாடி குடியிருப்பின் 19-ஆவது தளத்தில் சனிக்கிழமை காலை 7 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பல குடியிருப்புவாசிகள் தூக்கத்தில் இருந்துள்ளனா்.
இதையும் படிக்க- அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள், பல குடியிருப்புவாசிகளை பத்திரமாக மீட்டனா். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
21 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 13 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் 5 பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.