உத்தரகண்ட் தேர்தல்: முதல்வர் தாமி வீடு வீடாகச் சென்று பிரசாரம்

உத்தரகண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காதிமா தொகுதியின் மெல்காட் பகுதியில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார். 
உத்தரகண்ட் தேர்தல்: முதல்வர் தாமி வீடு வீடாகச் சென்று பிரசாரம்

உத்தரகண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காதிமா தொகுதியின் மெல்காட் பகுதியில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார். 

மக்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், 

நான் உங்கள் மகன், உங்கள் சகோதரன், வரும் நாட்களில் உங்கள் பிரச்னைகள் அனைத்தும் கேட்கப்படும் என்றார். 

மேலும், பிரதமர் மோடி தொடங்கிவைத்த அரசுத் திட்டங்கள் அனைத்தும் ஏழை மக்களுக்காகவே உள்ளது. உத்தரகண்ட் வளர்ச்சிக்காக பாஜக செய்த அளவுக்கு வேறு எந்த கட்சியும் உழைக்கவில்லை என்று அவர் கூறினார். 

முன்னதாக, கடந்த வியாழக்கிழமை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி காதிமா சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகண்ட் சட்டப் பேரவைக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com