மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கண்டி உட்பிரிவில் 6 வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முர்ஷிதாபாத் மாவட்ட காவல்துறை வெடிகுண்டு செயலிழப்பு படை அதிகாரி கூறுகையில்,
சலார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தின் கண்டி உட்பிரிவில் இதுவரை 6 வெடி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், அனாருல் ஷேக் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக மேலும் அப்பகுதியில் விசாரணை நடைபெற்ற வருகின்றது.