‘நாட்டில் உள்ள நதிகளை இணைப்பதில் தீவிரம்’: குடியரசுத் தலைவர்

நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்தார்.

நாட்டில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதலாவது கூட்டத்தொடா் என்பதால், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார்.

அப்போது, நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பாரம்பரிய மழைநீர் சேமிப்புகளை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com