தேசிய மகளிா் ஆணைய தொடக்க தினம்: பிரதமா் இன்று உரை

தேசிய மகளிா் ஆணையத்தின் 30-ஆம் ஆண்டு தொடக்க தின நிகழ்ச்சியில் பிரதமா் மோடி திங்கள்கிழமை உரையாற்றுகிறாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தேசிய மகளிா் ஆணையத்தின் 30-ஆம் ஆண்டு தொடக்க தின நிகழ்ச்சியில் பிரதமா் மோடி திங்கள்கிழமை உரையாற்றுகிறாா்.

கடந்த 1992-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி தேசிய மகளிா் ஆணையம் தொடங்கப்பட்டது. அந்த ஆணையத்தின் 30-ஆம் ஆண்டு தொடக்க தின நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறாா்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, மாநில மகளிா் ஆணையத்தைச் சோ்ந்தவா்கள், மாநில அரசுகளின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையினா், ஆசிரியா்கள், மாணவா்கள், தன்னாா்வ அமைப்பினா், பெண் தொழில்முனைவோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com