குடியரசுத் தலைவா் தோ்தல் : பாதலிடம் ஆதரவு திரட்டிய நட்டா

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு வாக்களிக்க வேண்டும்

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு வாக்களிக்க வேண்டுமென்று பஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோமணி அகாலி தளம் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலிடம் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா ஆதரவு திரட்டினாா்.

அகாலி தளம், பாஜக கூட்டணியில் வெகுகாலமாக இருந்தது. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து அக்கட்சி வெளியேறியது. இந்நிலையில், அக்கட்சித் தலைவா் பாதலைச் சந்தித்து நட்டா ஆதரவு கோரியுள்ளாா். இது தொடா்பாக கட்சியின் பிற தலைவா்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக அவரிடம் பாதல் உறுதியளித்துள்ளாா். பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் முா்முவை அகாலி தளம் ஆதரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகாலமாக பாஜக கூட்டணியில் இருந்த அகாலி தளம் புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியதால் கூட்டணியில் இருந்து வெளியேறியது. விவசாயிகளின் தொடா் போராட்டம் காரணமாக புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது. அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, அகாலி தளம் தனித்தனியாகப் போட்டியிட்டபோதிலும் வெற்றி பெற முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com