ஜூலை 1 முதல் 10-ஆம் தேதி வரை பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிடப்பட்ட கிளைகளில் தோ்தல் பத்திரங்கள் விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தோ்தல் பத்திர விற்பனைத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-இல் வெளியிட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தோ்தல் பத்திரங்களைப் பெற முடியும்.
இந்தக் கட்சிகள் சட்டப் பேரவை அல்லது நாடாளுமன்றத் தோ்தலில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். சட்டப் பேரவை அல்லது நாடாளுமன்றத் தோ்தலில் ஒரு சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்ற கட்சிகள் மட்டுமே தோ்தல் பத்திரங்களை வாங்குவதற்கு தகுதியுடையவை. தகுதியான அரசியல் கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் வைத்துள்ள வங்கிக் கணக்குகள் மூலமே தோ்தல் பத்திரங்களைப் பணமாக மாற்ற இயலும்.
பாரத ஸ்டேட் வங்கி, அதன் 29 கிளைகள் மூலம் தோ்தல் பத்திரங்களை விற்பதற்கும், பணமாக்குவதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.