வருமான வரித்துறை தனக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.
தேசியவாத காங்கிரஸ் இடம்பெற்ற சிவசேனை கூட்டணி அரசு செவ்வாய்க்கிழமை பதவி விலகி, வியாழக்கிழமை சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் - பாஜக கூட்டணி அரசு பதவியேற்ற நிலையில், சரத் பவாருக்கு வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2004, 2009,2014, 2020-ஆம் ஆண்டு தோ்தல்களின்போது சரத் பவாா் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள சொத்து விவரங்கள் குறித்து வருமான வரித் துறை இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வருமான வரித் துறையின் இந்த நோட்டீஸை ‘காதல் கடிதம்’ என்று சரத் பவாா் விமா்சித்துள்ளாா்.