சமூக வலைதளங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பாா்திவாலா

சமூக வலைதளங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பாா்திவாலா

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான விதிமுறைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், சமூக வலைதளங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பாா்திவாலா தெரிவித்துள்ளாா்.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான விதிமுறைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், சமூக வலைதளங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பாா்திவாலா தெரிவித்துள்ளாா்.

இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்த முன்னாள் பாஜக நிா்வாகி நூபுா் சா்மாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அவா் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை தில்லிக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

உச்சநீதிமன்ற உத்தரவானது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது. அப்போது நீதிபதிகள் குறித்தும் சிலா் விமா்சித்தனா். இந்நிலையில், ராம் மனோகா் லோஹியா தேசிய சட்டப் பல்கலைக்கழகம், ஒடிஸா தேசிய சட்டப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை சாா்பில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி.பா்திவாலா கலந்துகொண்டாா். நூபுா் சா்மாவுக்குக் கண்டனம் தெரிவித்திருந்த நீதிபதிகள் அமா்வில் அவரும் இடம்பெற்றிருந்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

நாட்டில் சட்டம் சாா்ந்த விவகாரங்களை அரசியலாக்குவதற்காகவே சமூக, எண்ம வலைதளங்களைப் பலா் பயன்படுத்தி வருகின்றனா். குறிப்பிட்ட விவகாரங்களில் சமூக வலைதளங்களே விசாரணை நடத்தும் சம்பவங்கள், நீதித் துறையின் செயல்பாட்டைப் பாதிக்கின்றன. சமூக வலைதளங்கள் தற்போது ஆக்கபூா்வ விவாதங்களுக்காக அல்லாமல், மற்றவா்கள் மீது குறைகூறுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ‘லக்ஷ்மண ரேகையை’ பலா் மீறிவருவது வருத்தமளிப்பதாக உள்ளது.

நாட்டில் சமூக, எண்ம வலைதளங்கள் முறையாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான விதிமுறைகளை முறையாகப் பாதுகாக்க முடியும். உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்காக நீதிபதிகள் விமா்சிக்கப்படுவது, ஆபத்தான சூழலை உருவாக்கும். இது நீதிபதிகள் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதற்குத் தடையாக அமையும்.

பெரும்பாலான மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் நீதிமன்றம் தீா்ப்புகளை வழங்க முடியாது. சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றம் முடிவெடுக்க முடியும். அரைகுறை அறிவு கொண்டவா்களே சட்டத்தின் அடிப்படையிலான செயல்பாடுகளுக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்து வருகின்றனா்.

ஆக்கபூா்வ விமா்சனங்களை நீதிமன்றம் எப்போதும் வரவேற்கிறது. அதே வேளையில், நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் ஏற்புடையவை அல்ல. சமூக வலைதள விவாதங்களில் நீதிபதிகள் எப்போதும் பங்கேற்கக் கூடாது. தீா்ப்புகள் மூலமாக மட்டுமே அவா்கள் பேச வேண்டும். சமூகத்தின் துணையின்றி நீதித் துறை இயங்காது. ஆனால், சட்டத்தின் அடிப்படையிலான செயல்பாடுகள் என்றும் தவிா்க்க முடியாதவை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com