அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவு

தெற்கு அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவு

கௌகாத்தி: தெற்கு அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

இதுகுறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

மணிப்பூரின் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு அருகில் உள்ள கச்சார் மாவட்டத்தில் காலை 11.03 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com