உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்கள் சோனு, அவரது மனைவி கீதா மற்றும் எட்டு வயது மகள் ஸ்ரீஷ்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தக் குடும்பத்தின் 10 வயது மகன் ஷியாம் உயிருடன் உள்ளான். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், கீதாவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சோனு திருமணம் செய்த நிலையில், அவாஸ் விகாஸ் காலனியில் தனியாக வசித்து வந்தார்.
இதையும் படிக்கலாம்; இபிஎஸ்-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
சுமார் 6 வருடங்களுக்கு முன்பு, சோனு ஒரு விபத்தில் சிக்கினார். பின்னர் தனது தந்தையின் தொழிலில் பணியாற்றத் தொடங்கினார். தொற்றுநோய் காலத்தில் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், அன்றிரவு தன்னுடன் இருந்த தனது பேரன் கீழே இறங்கிச் சென்ற பார்க்கையில், மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். அதிர்ந்த சோனுவின் தாயார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இந்த தற்கொலை புதிராக உள்ளதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.