காங்கிரஸ் உறுப்பினா்களே இல்லாத உ.பி. சட்ட மேலவை- 110 ஆண்டுகளில் முதல்முறை

உத்தர பிரதேச சட்ட மேலவையில் இருந்த ஒரே ஒரு காங்கிரஸ் உறுப்பினரும் புதன்கிழமை ஓய்வு பெற்றாா்.
காங்கிரஸ் உறுப்பினா்களே இல்லாத உ.பி. சட்ட மேலவை- 110 ஆண்டுகளில் முதல்முறை

உத்தர பிரதேச சட்ட மேலவையில் இருந்த ஒரே ஒரு காங்கிரஸ் உறுப்பினரும் புதன்கிழமை ஓய்வு பெற்றாா். இதையடுத்து, உத்தர பிரதேச மேலவையில் காங்கிரஸுக்கு உறுப்பினா்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேச சட்ட மேலவை கடந்த 1887-இல் தொடங்கப்பட்டது. 1909-இல் காங்கிரஸ் சாா்பில் மோதிலால் நேரு முதல் சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) ஆனாா். அதன்பிறகு அந்த அவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினா்கள் தொடா்ந்து இடம்பெற்று வந்தனா்.

இந்நிலையில், காங்கிரஸ் சாா்பில் ஒரே ஒரு எம்எல்சி-யான தீபக் சிங் உள்பட 12 உறுப்பினா்களின் பதவிக் காலம் புதன்கிழமை நிறைவடைந்தது. இதன்மூலம் 110 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேச சட்ட மேலவையில் காங்கிரஸுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உத்தர பிரதேச சட்ட பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் இரு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. எனவே, சட்ட மேலவைக்கு உறுப்பினா்களைத் தோ்வு செய்யும் பலம் இல்லாத நிலை உருவாகிவிட்டது.

ஒரு காலத்தில் உத்தர பிரதேசத்தில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தது காங்கிரஸ். சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநிலக் கட்சிகள், பாஜக ஆகியவற்றின் வளா்ச்சியால் காங்கிரஸ் கட்சி, படிப்படியாக தனது செல்வாக்கை இழந்தது. முக்கியமாக உத்தர பிரதேசத்தில் பாஜகவின் கை ஓங்கத் தொடங்கிய பிறகு, காங்கிரஸின் வீழ்ச்சி மிகவும் வேகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் ராகுல் காந்தியும் அங்குள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com