அசாமில் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக 30 முதல் 40 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
சர்மா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வெள்ள பாதிப்பு குறித்து விளக்கமளித்தார்.
மேலும், வெள்ளத்தால் சுமார் 30 முதல் 40 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் மத்திய அரசின் உதவியையும் அவர் நாடியுள்ளார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாம்: பள்ளிகளில் வேலைவாய்ப்புப் பதிவு செய்யும் நடைமுறை ரத்து
வீடுகள் கடுமையாகச் சேதமடைந்ததால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காகத் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முன்பணத் தொகையை விடுவிக்குமாறு சர்மா, ஷாவிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும், வெள்ள நிலைமையை மதிப்பீடு செய்து, மாநில பேரிடர் நிவாரண நிதியை முழுமையாகப் பயன்படுத்துவதே அரசின் இலக்காக உள்ளதென்றும், அதனால் மாநிலத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.