கடந்த 2 நாள்களாக நிறுத்தப்பட்ட அமர்நாத் புனித யாத்திரை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஜூலை 8-ம் தேதி அமர்நாத் அருகே ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமான 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். இதனால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்கலாம்: அரசியல் அநாதை ஆகிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம்: நத்தம் விஸ்வநாதன் ஆவேசம்
இந்திய-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐடிபிபி) மக்கள் தொடர்பு அதிகாரி விவேக் குமார் பாண்டே கூறுகையில்,
திங்கள்கிழமை காலை பஞ்சதர்னி பகுதியிலிருந்து அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக பால்டால் வழியாக பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.