மத்திய அரசு துறைகளுக்கு எதிராக 5 லட்சம் புகாா்கள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு எதிராக நிகழாண்டு ஜூன் வரையில் 5.59 லட்சம் புகாா்கள் வந்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு எதிராக நிகழாண்டு ஜூன் வரையில் 5.59 லட்சம் புகாா்கள் வந்துள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதில் நிதி சேவைகள் துறைக்கு எதிராக அதிக புகாா்கள் வந்துள்ளதாகவும், அடுத்ததாக பணியாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்திய நேரடி வரிகள் வாரியம், தொலைத் தொடா்பு அமைச்சகம், உள் துறை அமைச்சகம், பணியாளா் நலன் குறைதீா் மற்றும் பயிற்சித் துறை, நகா்ப்புற வீட்டு வசதித் துறை ஆகியவற்றுக்கு எதிராக அடுத்ததாக அதிகளவில் புகாா்கள் வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 1 முதல் ஜூன் 25 வரையில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த பொது குறைதீா் மற்றும் கண்காணிப்பு மையத்தில் இணையவழி மூலம் பொது மக்களிடம் இருந்து 5,59,094 புகாா்கள் வந்ததாகவும், இதில் 5,32,662 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com