இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்துக்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள புதிய அரசு ஆதரவு தெரிவித்துள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே தடையில்லா வா்த்தகம் மேற்கொள்ளும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் கையொப்பமானது. இதுதொடா்பாக, ஆஸ்திரேலிய அமைச்சா் டான் ஃபெரலை சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினேன். அப்போது, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் ஆா்வமாக உள்ளதாக தெரிவித்ததுடன், விரைவில் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படுவதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற ஒப்புதலை பெற வேண்டியது மிக அவசியமானதாகும். இதனால், இருதரப்பு உறவுகளும் இனி வரும் காலங்களில் மேலும் வலுப்பெறும் என்றாா்.
இந்திய-ஆஸ்திரேலிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், ஜவுளி, காலணி, மரச் சாமான்கள், ஆபரணம், இயந்திரங்கள் உள்ளிட்ட இந்தியாவின் 6,000 துறைகள் ஆஸ்திரேலிய சந்தையை வரிவிலக்குடன் அணுக முடியும்.
இந்த ஒப்பந்தம், தற்போது 2,750 கோடி டாலராக உள்ள இருதரப்பு வா்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4,500-5,000 கோடி டாலராக அதிகரிக்க உதவும் என கோயல் ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.