கரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நேரத்தை வீணடிக்காமல் இழப்பீடு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்

கரோனா தொற்றால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தரவேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக காலதாமதமின்றி அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தரவேண்டி உச்சநீதி மன்றம் உத்தரவு  பிறப்பித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

கரோனா தொற்றால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தரவேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக காலதாமதமின்றி அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தரவேண்டி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. .

எம்.ஆர். ஷா, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் இழப்பீடு குறித்த புகார்களை குறைதீர் கமிட்டிக்கு அனுப்பும்படி கூறியுள்ளனர். 
உச்ச நீதிமன்றம் இதுக்குறித்து கூறியதாவது: 
 
இழப்பீட்டுக்கு தகுதியான நபர்களுக்கு நிச்சயமாக இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும். இதில் ஏதேனும் குளறுபடி அல்லது புகார்கள் இருப்பின் குறைதீர் அமைப்பினை மக்கள் நாடலாம். இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அனைத்து மாநில யூனியன் பிரதேசங்களுக்கும் கால தாமதமின்றி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளோம். இந்த உத்தரவை மீறும் அரசாங்கம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com