இந்தியா
கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு
கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளத்தில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில்,
துபாயில் இருந்து, கண்ணூரில் உள்ள பரியாரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 31 வயது நபருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: மாநிலங்களவையில் பதவியேற்காத இளையராஜா: காரணம் என்ன?
பாதிக்கப்பட்ட நபரின் உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாகவும், அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறினார்.அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஜூலை 14 ஐக்கிய அமீரகத்திலிருந்து வந்த கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை முதலில் பதிவானது.