சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் காயமடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
காங்ரா மாவட்ட அவசரக்கால செயல்பாட்டு மையம் வெளியிட்ட தகவலின்படி,
இந்த நிலச்சரிவு காலை 9 மணியளவில் மாவு ஆலைக்கு அருகிலுள்ள கட்டுமான தளத்தில் ஏற்பட்டது என்று பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுதேஷ் மோக்தா கூறினார்.
நிலச்சரிவில் சஹ்தேவ் (21), மற்றும் அவரது சகோதரர் வாசுதேவ்(30), ராஜீவ் குமார்(19), கௌரவ்(20), தேவ் நாராயண்(40), ஜகத்(42 இவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
நீது( 24) உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் மற்றும் வினய் குமார்(44) காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.