மலையாள இலக்கியத்தின் 'கிராண்ட் மதர்' என்று அழைக்கப்படும் கவிஞர் பாலமணி அம்மாவின் 113 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கூகுள் நிறுவனம், அவரை கௌரவிக்கும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
1909 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று திருச்சூர் மாவட்டத்தில் புன்னையூர்குளத்தில் நாலாபத்தில் பிறந்தார் பாலமணி அம்மா. அவர் முறையாக கல்வி கற்காவிட்டாலும் தனது உறவினர் உதவியால், புத்தங்களைப் படித்து தன்னை வளர்த்துக்கொண்டார்.
19 வயதில் மலையாளப் பத்திரிகையான மாத்ருபூமியின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரியர் வி.எம். நாயரை திருமணம் செய்துகொண்டார்.
1930 ஆம் ஆண்டு, தனது 21 வயதில், தனது முதல் கவிதையை 'கூப்புகை' என்ற தலைப்பில் வெளியிட்டார். பெண்களைப் பற்றியும் தாய்மையைப் பற்றியும் பல கவிதைகளை வெளியிட்ட அவர் 'தாய்மையின் கவிஞர்' என்று அறியப்பட்டார். அம்மா (1934), முத்தசி (1962) மற்றும் மழுவின்டே கதை (1966) ஆகியவை அவரது மிகவும் பிரபலமான படைப்புகள். தனது கவிதைகளுக்காக சரஸ்வதி சம்மான், பத்ம விபூஷண் என எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர்.
20க்கும் மேற்பட்ட கவிதை, உரைநடை மற்றும் மொழிபெயர்ப்புத் தொகுப்புகளை வெளியிட்டார். 1984ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலா தாஸ் இவருடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
2004 செப்டம்பர் 29ல் காலமானார்.
இதையும் படிக்க | இசையமைப்பாளர் ஆஸ்கர் சாலாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்!