குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல் வாக்குறுதியை ஜூலை 21ஆம் தேதி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் வெளியிடுகிறார்.
இந்தாண்டு இறுதியில் குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தில்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றிய ஆம் ஆத்மி, தற்போது குஜராத் மாநிலத்திலும் வெற்றி பெற கவனம் செலுத்தி வருகின்றது.
குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அரவிந்த் கேஜரிவால் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், வரும் ஜூலை 21ஆம் தேதி சூரத்திற்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது, ஆம் ஆத்மி கட்சியின் முதல் தேர்தல் வாக்குறுதியை அரவிந்த் கேஜரிவால் வெளியிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.