சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்கல்களால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் பழங்குடியின பெண் காயமடைந்தார்.
இன்று காலை கேதுல்நார் கிராமத்தைச் சேர்ந்த சோம்லி ஹேம்லா என்ற பெண் கிராமத்திற்கு அருகிலுள்ள வனத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஆஞ்சநேய வர்ஷ்னே தெரிவித்தார்.
அந்த பெண் கவனக்குறைவால் அழுத்தம் பொருந்திய வெடிகுண்டைக் காலால் மிதித்ததால் வெடித்துச் சிதறியது. காலில் காயம் ஏற்பட்ட நிலையில் அருகிலுள்ள கிராமத்தின் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார்.
பிஜப்பூர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 400 கிமீ தொலைவில் உள்ளது. வனப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களைக் குறிவைத்து, மண்ணில் வெடிகுண்டுகளைப் புதைத்து வைக்கின்றனர் நக்சல்கள்.