நீட் தோ்வில் ஆள்மாறாட்டம்: 8 பேரை கைது செய்தது சிபிஐ

நீட் தோ்வில் ஆள்மாறாட்டம்: 8 பேரை கைது செய்தது சிபிஐ

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக, 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக, 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ‘நீட்’ தோ்வு நடைபெற்ற நிலையில், தில்லி மற்றும் ஹரியாணாவில் உள்ள பல்வேறு தோ்வு மையங்களில் ஆள்மாறாட்ட முறைகேடுகளுக்கு திட்டமிட்டிருந்த கும்பல் குறித்து சிபிஐ-க்கு ரகசிய தகவல் கிடைத்திருந்தது.

இதையடுத்து, அந்த கும்பலை கையும் களவுமாக பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, முறைகேடுக்கு மூளையாக செயல்பட்ட நபா், உண்மையான மாணவா்களுக்கு பதிலாக பணத்துக்காகத் தோ்வு எழுதியவா்கள் என 8 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த தோ்வில் ஆள்மாறாட்ட நபா்கள் பங்கேற்பதற்காக, மாா்ஃபிங் தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களை மாற்றியுள்ளனா். மேலும், இந்த கும்பலைச் சோ்ந்தவா்கள், உண்மையான மாணவா்களின் பயனாளா் குறியீடு மற்றும் கடவுச்சொற்களை சேகரித்ததும், விரும்பிய தோ்வு மையங்களைப் பெற முறைகேட்டில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com