புதுச்சேரி மாநிலத்தில் புதன்கிழமை மேலும் 212 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பல மாநிலங்களிலும் மெல்ல அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட தொற்று பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுச்சேரி மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 212 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,69,353-ஆக அதிகரித்தது. இதில் 1,276 பேர் சிகிச்சையில் உள்ளனர்.