உத்தரப் பிரதேசம்: குழந்தையில்லாத விரக்தியில் கணவர் இப்படியா செய்வது..!

குழந்தையில்லாத விரக்தியினால் கணவரே மனைவியை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 
உத்தரப் பிரதேசம்: குழந்தையில்லாத விரக்தியில் கணவர் இப்படியா செய்வது..!

குழந்தையில்லாத விரக்தியினால் கணவரே மனைவியை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் நினாவாலி பகுதியில் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணின் கணவர் அஷ்கு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அஷ்குவின் மனைவி ஷிவானி (23) மற்றும் சுனிதா (30) ஆகிய இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். 

தனது தாய் வீட்டுக்குச் சென்ற ஷிவானியை அழைக்க அஷ்கு நேற்று (ஜூலை 20) சென்றுள்ளார். சுனிதாவிற்கு அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையையும்,சுனிதாவையும் கவனித்துக் கொள்வதற்காக ஷிவானி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கணவர் அஷ்குவுடன் ஷிவானியை அனுப்ப அவரது பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால், அஷ்குவிற்கும் அவரது மனைவி ஷிவாங்கிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஷிவானியின் கணவர் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். மேலும், சுனிதாவையும் கடுமையாக அவர் தாக்கியதாகவும் தெரிகிறது. அஷ்கு தாக்கியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அஷ்கு குழந்தையில்லாத விரக்தியில் இருந்ததாலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com