இந்தியாவின் புதிய விமான சேவை நிறுவனமான ‘ஆகாசா ஏர்’ வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர் , தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கியுள்ள ‘ஆகாசா ஏர்’ என்னும் புதிய விமான சேவை நிறுவனத்தின் லோகோ மற்றும் வடிவமைப்பு ’இட்ஸ் யுவர் ஸ்கை’ என்கிற தலைப்பில் கடந்த ஆண்டு டிசம்பம் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ‘ஆகாசா ஏர்’ வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் பயணிகள் சேவையை தொடங்குகிறது.
மேலும், ’ஆகாசா ஏர்’ நிறுவனம் 72 மேக்ஸ் 737 போயிங் ரக விமானங்களை பயணத்திற்கு பயன்படுத்த உள்ளது.
முதல் பயணம் வருகிற ஆகஸ்ட் 7 ஆம் தேதி மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.