வாராணசி விமான நிலையத்தில் ரூ.1.21 கோடி தங்கத்துடன் ஒருவர் கைது

வாராணசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் ரூ.1.21 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

வாராணசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் ரூ.1.21 கோடி மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

இதுகுறித்து மூத்த சுங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 

இன்று வந்த விமானத்தில் பயணிகள் சிறிது நேரம் தங்கியிருந்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து சோதனை நடத்தியதில் ஷார்ஜாவிலிருந்து வாரணாசிக்கு வந்த பயணி ஒருவரிடம் ரூ.1,21,30,560 மதிப்புள்ள 2332.800 கிராம் சுத்த தங்கத்தை வாரணாசி குழுவினர் கைப்பற்றி, அந்த நபரைக் கைது செய்தனர். 

அவர் வாரணாசி தலைமை நீதித்துறை (பொருளாதார குற்றங்கள்) முன் முன்னிறுத்தப்படுவார். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com