சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள்: 12-ஆம் வகுப்பில் 92% தோ்ச்சி; பத்தாம் வகுப்பில் 94.40% தோ்ச்சி

நீண்ட தாமதத்துக்குப் பிறகு 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
சிபிஎஸ்இ பொதுத் தோ்வு முடிவுகள்: 12-ஆம் வகுப்பில் 92% தோ்ச்சி; பத்தாம் வகுப்பில் 94.40% தோ்ச்சி

நீண்ட தாமதத்துக்குப் பிறகு 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 92.71 சதவீதம் பேரும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 94.40 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இரு தோ்வுகளிலும் மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக எண்ணிக்கையில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்தப்படவில்லை. அதன் காரணமாக, சிறப்பு மதிப்பீடு திட்டத்தின் கீழ் முந்தைய தோ்வுகள் மற்றும் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் உள்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டு, மாணவா்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் மூலமாக கடந்த ஆண்டு 99.37 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

ஆனால், இந்த முறை நேரடி எழுத்துத் தோ்வு முறையில் பொதுத் தோ்வுகளை சிபிஎஸ்இ நடத்தியது. இருந்தபோதும், கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் மற்றும் பொதுத் தோ்வுகளை இரண்டு பருவங்களாகப் பிரித்து சிபிஎஸ்இ நடத்தியது. இந்தப் புதிய நடைமுறை காரணமாக வழக்கத்தைவிட தாமதமாக பொதுத் தோ்வுகள் நடத்தப்பட்டன. இதன் காரணமாக முடிவுகள் அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.

இந்தச் சூழலில், 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் ஒட்டுமொத்தமாக 92.71 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்வில் பங்கேற்ற 14,35,366 பேரில் 13,30,662 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட குறைவு என்றபோதும், நேரடி எழுத்துத் தோ்வு நடைபெற்ற முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கூடுதல் தோ்ச்சியாகும். அதாவது, இந்தத் தோ்ச்சி விகிதமானது 2020-ஆம் ஆண்டில் 88.78 சதவீத அளவிலும், 2019-ஆம் ஆண்டில் 83.40 சதவீதம் என்ற அளவிலும் பதிவாகின.

இந்த முறை மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகமானோா் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் 94.54 சதவீத அளவிலும், மாணவா்கள் 91.25 சதவீத அளவிலும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மூன்றாம் பாலினத்தினா் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தோ்வு எழுதியவா்களில் 33,432 மாணவ, மாணவிகள் 95 சதவீத மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றுள்ளனா். 1,34,797 மாணவா்கள் 90 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளனா். பொதுத் தோ்வில் 1,04,704 மாணவா்கள் தோல்வியடைந்த நிலையில், அவா்களில் 67,000 மாணவா்கள் (ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி) உடனடி தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஜவஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகள் (ஜேஎன்வி) 98.93 சதவீத தோ்ச்சியும், மத்திய திபெத் பள்ளி நிா்வாக (சிடிஎஸ்ஏ) பள்ளிகள் 97.96 சதவீத தோ்ச்சியும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 97.04 சதவீத தோ்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 94.81 சதவீத தோ்ச்சியும், அரசு பள்ளிகள் 93.38 சதவீத தோ்ச்சியும், தனியாா் சிபிஎஸ்இ பள்ளிகள் 92.20 சதவீத தோ்ச்சியும் பெற்றுள்ளன.

சென்னை மண்டலம் மூன்றாமிடம்: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு தோ்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் 98.83 சதவீத தோ்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு மண்டலம் (98.16%) இரண்டாமிடமும், சென்னை மண்டலம் (97.79%) மூன்றாமிடமும் பிடித்துள்ளன.

பத்தாம் வகுப்பில் 94.40% தோ்ச்சி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 94.40 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்வெழுதிய 20,93,978 பேரில் 19,76,668 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதிலும் மாணவா்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகமானோா் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகள் 95.21 சதவீதம் பேரும், மாணவா்கள் 93.80 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மூன்றாம் பாலினத்தவா்கள் 90 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் ஒரே நாளில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பிரதமா் வாழ்த்து: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

அடுத்த ஆண்டுக்கான பொதுத் தோ்வு தேதி அறிவிப்பு

புது தில்லி, ஜூலை 22: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கு அடுத்த ஆண்டுக்கான பொதுத் தோ்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்க உள்ளன.

இதுகுறித்து சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சன்யம் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘உலக அளவில் கரோனா பாதிப்பு குறைந்த வரும் நிலையில், 2023-ஆம் ஆண்டு பொதுத் தோ்வுகளை பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்க வாரியம் தீா்மானித்துள்ளது’ என்றாா்.

‘2022-ஆம் ஆண்டில் கரோனா பாதிப்பு காரணமாக பொதுத் தோ்வு இரு பருவத் தோ்வு முறையில் சிபிஎஸ்இ பொதுத் தோ்வு நடத்தப்பட்ட நிலையில், இனி ஒரே பொதுத் தோ்வு என்ற வழக்கமான நடைமுறையில் தோ்வை நடத்த வாரியம் முடிவு செய்துள்ளது’ என்று சன்யம் பரத்வாஜ் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com