நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 21,411 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,25,997 ஆக உயர்ந்துள்ளது. இறந்தோரின் விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,50,100 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 0.34 சதவீதமாக உள்ளது.
கரோனாவில் இருந்து மேலும் 20,726 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,31,92,379 -ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.46 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2,01,68,14,771 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 34,93,209 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் நாளை மறுநாள் 2,000 இடங்களில் கரோனா மெகா தடுப்பூசி முகாம்