கர்நாடக எல்லையான கண்ணூர் மாவட்டத்தில் அய்யன்குன்னு என்ற இடத்தில் ஒரு பெண் உள்பட மூன்று மாவோயிஸ்ட்டுகளைப் பிடிக்கக் கேரள காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயுதம் ஏந்திய மூன்று மாவோயிஸ்ட்டுகள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று உணவுப் பொருள்களை சேகரித்ததாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் வாசிக்கலாம் | நடுவானில் பயணிக்கு சிகிச்சையளித்த தமிழிசை: குவியும் பாராட்டு
இச்சம்பவம் ஜூலை 15 தேதி நடைபெற்றது. மாவோயிஸ்டுகள் இரவில் அப்பகுதிக்கு சென்றதால் அவர்கள் கொண்டு சென்ற ஆயுதம் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவித்தனர்.
காவல்துறையின் உயரடுக்கு கமாண்டோ படையான தண்டர்போல்ட் அப்பகுதிக்குச் சென்று ஆதாரங்களைச் சேகரித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து, இரிட்டி துணை எஸ்பி தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.