சோமநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார் அரவிந்த் கேஜரிவால்

புகழ்பெற்ற சோமநாதர் கோயிலுக்குச் சென்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வழிபாடு செய்தார்.  
சோமநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார் அரவிந்த் கேஜரிவால்

குஜராத்தில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள வெராவல் நகருக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற சோமநாதர் கோயிலுக்குச் சென்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வழிபாடு செய்தார். 

நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்கள் நல்வாழ்வுக்காகவும்  பிரார்த்தனை செய்ததாக

மேலும், மாநிலத்தின் பொடாட் நகரில் கள்ளச் சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்ததற்காக அவர் வருத்தம் தெரிவித்தார். 

இறந்த ஆத்மாக்கள் அமைதி அடையட்டும், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடையட்டும் என்றார். 

மாநிலத்தில் சட்டவிரோத மதுபானங்களை விற்கும் மக்கள் அரசியல் பாதுகாப்பை அனுபவித்து வருவதாகவும், சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டியது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com